ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தீபாவளியை ஒட்டி கடலூர் சிறைக் கைதிகளுக்கு பிரியாணி: லயன்ஸ் சங்கம் ஏற்பாடு

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்தியச் சிறைச் சாலையில் அடைபட்டுள்ள 1,200 கைதிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் சிக்கன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:04 am

பெ. விஜயபாஸ்கர்

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்தியச் சிறைச் சாலையில் அடைபட்டுள்ள 1,200 கைதிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் சிக்கன் பிரியாணி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

 லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சிவக்குமார் தலைமையில் சங்க  உறுப்பினர்கள் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று, 1,200 கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர். அசைவம் சாப்பிடாத கைதிகளுக்கு வெஜிடபுள் பிரியாணி வழங்கப்பட்டது.

 லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஞானவேல், ராஜேந்திரன், ஆர்த்தி நாகராஜன் மற்றும் நெப்போலியன் உள்ளிட்டோர் கைதிகளுக்கு பிரியாணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

 சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோர் கைதிகளை வரிசைப்படுத்தி உணவு உண்ணச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.