கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மதுவை ஒழிக்க வலியுறுத்தி விருது நகரில் ஏபிவிபி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாசன்குமார் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:58 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மதுக்கடைகளை மூடவலியுறுத்தி வியாழக்கிழமை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாசன்குமார் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் தொழிலதிபருமான வி.வி.எஸ்.யோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதற்காக மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதை  வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முக்கிய பிரமுகர்களான டி.கே.எஸ்.சங்கரபாண்டியன, நகர நல அமைப்புச் செயலாளர் டாக்டர் ரத்தினவேல், தொழிலதிபர்கள் இதயம் முத்து, கே.எம்.ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கேரளம், தமிழக பொறுப்பாளர் மற்றும் விவேகானாந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வன்னியராஜன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். இதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அனைத்து கிளை இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக இப்போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.