கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு 

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் எண்ணைய் வாங்கி ரூ.9 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:58 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் முந்திரி எண்ணைய் வியாபாரியிடம் எண்ணைய் வாங்கி ரூ.9 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் குருசாமி கொத்தனார் தெருவில் வசித்து வருபவர்  பாலகிருஷ்ணன்(48). இவர் இப்பகுதியில் முந்திரிக்கொட்டைகளில் இருந்து எண்ணைய் எடுக்கும் தொழில் மற்றும் பிண்ணாக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் இருந்து மைசூர் மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கதிர்வேலன், கிருஷ்ணசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து 1050 டின் முந்திரி எண்ணைய் வாங்கினார்களாம். மேலும், இதற்கான தொகை ரூ.9 லட்சத்தை இரண்டு நாள்களாக தருவதாக கூறிச் சென்ற நிலையில் திருப்பி தரவில்லையாம். மேலும், பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு பேசியதில் தரமறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்ய உத்தரவித்தார். அதையடுத்து, விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.