இதனால், கூரைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சுற்றி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாள்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் ரயில்வே நிர்வாகத்தினர் சனிக்கிழமை திறப்பதாக உறுதியளித்திருந்தனர். இதனால், திறக்க நடவடிக்கை எடுக்காமல் தடுப்புகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் இச்சம்பவம் அறிந்த ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராவணன், சார்பு ஆய்வாளர் மோகன்தாஸ், துணை வட்டாட்சியர் கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து முற்றுகையிட்ட கிராம மக்களிடமும், ஊராட்சி தலைவர் வேலாயுதம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.