/

நாமக்கல் மலை மீதிருந்து நரசிம்மர் சந்நிதி அருகே கீழே விழுந்து ஒருவர் மர்ம மரணம்

நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள மேல் பகுதியில் இருந்து, 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கீழே விழுந்து மூளை சிதறி பலியானார். மேலிருந்து கீழே தவறி விழுந்தாரா அல்லது, தற்கொலை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:55 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள மேல் பகுதியில் இருந்து, பகல் ஒரு மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கீழே விழுந்து மூளை சிதறி பலியானார். மேலிருந்து கீழே தவறி விழுந்தாரா அல்லது, தற்கொலை செய்ய குதித்தாரா என்று தெரியவில்லை என அருகில் இருந்தவர்கள் கூறினர்.

இன்று விஜயதசமி என்பதால், நாமக்கல் நரசிம்மர் குடைவரைக் கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. சரியாக நரசிம்மர் சந்நிதி வெளிப்புறத்தில் இந்த நபர் விழுந்து உயிரிழந்ததால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.