தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே கனிம வள முறைகேடுகள் மட்டுமல்லாது, இயற்கை வளங்களும் தொடர்ந்து சுரண்டப்பட்டு தான் வந்திருக்கின்றன. அதிமுக ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதிலும் சரி, நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியிலிருந்து விலகி, புதிய முதல்வர் பதவியேற்ற பிறகு நடைபெற்று வரும் ஆட்சியிலும் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவே இல்லை என்று அதிமுகவால் உத்தரவாதத்துடன் கூற முடியுமா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். முத்திரை குத்தப்பட்ட ஊழல் கட்சி காங்கிரஸ். 2ஜி ஊழலில் சிக்கியுள்ள திமுக தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. அதனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடையே ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி ஆதரவு கோருவோம். பொதுமக்கள் எங்களுக்கு கண்டிபாக ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.