/

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் என

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:19 am

பெ. விஜயபாஸ்கர்

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய ஆலோசனை குழு கூட்டம், திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் அமுதா தலைமையில் ரயில் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. நிலைய மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், டாக்டர் சந்திரன், பேராசிரியர்கள் நடராஜன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் முதுநகர்-திருச்சி பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் அமுதா, மேல்அதிகாரியிடம் உங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.