மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி திமுக தான். தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கடந்த 3 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிரடியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால் கட்டணமும் உயர்த்தப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத ஒரே மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணம், திமுக ஆட்சி காலத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தான்.இலவச வேட்டி, சேலைகள் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.