தமிழை போற்றி வளர்த்த மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் சம்புபாதாசிருதர் சிவஞானவதி அம்மையார் செய்த அருந்தவப்பேற்றால் மாணிக்கவாசகர் என்னும் வாதவூரடிகள் அவதரித்தார் இவரது திறமையை தெரிந்து கொண்ட மதுரை அரசன் அதிமர்த்தன பாண்டியன் இவர்க்கு தென்னவன் பிரமராயன் என்னும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்ததோடு சோழநாட்டில் உள்ள கடற்கரைக்கு வந்த குதிரைகளை வாங்கிவர பெரும்பொருளோடு வாதவூரரை மன்னன் அனுப்புகிறான் செல்லும் வழியில் ஆவுடையார்கோயில் எனவழங்கும் திருப்பெருந்துறையில் சிவபெருமான் வாதவூரை ஆட்கொள்ள வேண்டி ஒரு சிவ முனிவரின் திருக்கோலங்கொண்டு சிவகணங்கள் சூழ குருந்த மரத்தடியில் சிவஞானப்பொருளை உணர்த்திக்கொண்டிருந்தார்