மேலும், சிவகாசியில் பட்டாசு விபத்தில் காயம் அடையும் தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.4.50 கோடியில் நவீன சிகிச்சை மையமும், தொழிலாளர்கள் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ரூ.2.36 கோடியில் பயிற்சி மையமும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பொருள்களை பதப்படுத்தும் வகையில் 3400 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா, அருப்புக்கோட்டையில் அரசு தொழில் பயிற்சி நிலையம், சாத்தூர் நகராட்சியில் ரூ. 37.66 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருப்பரங்குன்றத்தை புரதான நகராக அறிவித்து ரூ.1 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.