இவர் இதற்கு முன்பு அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். அதோடு, தற்போது மாவட்ட துணைச் செயலாளராகவும், சிவகாசி ஊராட்சி ஒன்றியச் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நேரில் சென்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட, வட்டார நிர்வாகிகளை சந்தித்து அறிமுகமாகி கட்சிக்காரர்களுடன் இணைந்து ஆதாரவை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால், அதற்கு முன்னதாக அரசு பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும்.