விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புலிநாயக்கனூர் கம்மாபட்டி பகுதியில் கருந்திரி தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதில், அருமைதுரையின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதேபோல், சிறுமி காளீஸ்வரி, சிறுவன் காளிராஜ் மற்றும் மூதாட்டி பொன்னம்மாள் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் இளங்கோ, புதிய தமிழகத்தின் ஒன்றியச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பு விருதுநகர்-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.