/

புதுக்கோட்டையில் சென்ற ஆண்டு சாலை விபத்தில பலியான 7மாணவர்களுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த எ.விஷ்னு எஸ்.சிவக்குமார் ஆர்.சத்யா ஆர்.நாரயணசாமி எஸ்.மதியழகன் எம்.மணிகண்டன் எம்.அருண்குமார் ஆகிய 7மாணவர்கள்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:38 am

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த எ.விஷ்னு எஸ்.சிவக்குமார் ஆர்.சத்யா ஆர்.நாரயணசாமி எஸ்.மதியழகன் எம்.மணிகண்டன் எம்.அருண்குமார் ஆகிய 7மாணவர்கள் ஓன்றாக சிற்றுந்து வண்டியில் வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றபோது வல்லநாடு கிராமம் அருகே தனியார் பேருந்தும் சிற்றுந்தும் நேர்க்கு நேர் மோதிக்கொண்டதில் 7மாணவர்களும் சிற்றுந்து ஓட்டுநரும் விபத்தில் பலியாகி தமிழகத்தையே கண்ணீர் சிந்த வைத்தனர்

அதை நினைவு கூறும் வகையில் இன்று வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது விஜயரகுநாதபுரம் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மௌன ஊர்வலம் மெலுகுவர்த்தி ஏந்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.