ட்ரைபல் வெல்ஃபேர் டிரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு, கடன்பெற்றுத்தர ஆள் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டதன்பேரில் ராமநாயக்கன் பட்டி, தோட்டக்கூர்பட்டி, அணைப்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளரிகளை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தேன். தொடர்ந்து, ராஜூ 127 நபர்களிடம் மொத்தம் ரூ.2.88 லட்சத்தை வசூலித்துவிட்டு தற்போது 1.5 ஆண்டாக ஏமாற்றி வருகிறார். இதனால், பணத்தை இழந்தவர்கள் தற்போது என்னை தொந்தரவு செய்கின்றனர். இதற்கிடையே, மே மாதம் வரை பணம் தருவதாக கூறி வந்த ராஜு, அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.