ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாகன தணிக்கையின்போது தலைமைக் காவலரை தாக்கிய இளைஞர் கைது

வாகன தணிக்கையின்போது தலைமைக்காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:00 am

பெ. விஜயபாஸ்கர்

வாகன தணிக்கையின்போது தலைமைக்காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக்காவலர் சிவக்கொழுந்து ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை முத்தையா நகர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை தலைமைக்காவலர் சிவக்கொழுந்து கேட்டுள்ளார். அப்போது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, அந்த இளைஞர் திடீரென  தாக்கியுள்ளார்.

 இதில் படுகாயமடைந்த தலைமைக்காவலர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தலைமைக்காவலர் சிவக்கொழுந்தை தாக்கியதாக உசுப்பூரை சேர்ந்த குமார் மகன் கௌதம்(23) என்பவரை, அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.