இதையடுத்து ஆறுமுகமும், வேல்முருகனும் தீவிரமாக மாப்பிள்ளைத் தேடும் பணியில் ஈடுபட்டு சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த குப்புசாமி(54) என்பவரை சுட்டிக்காட்டி, திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஈடான வகையில் பெண் வீட்டாருக்கு குறிப்பிட்டத் தொகை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சின்னதுரையிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து பணத்துக்கு ஆசைப்பட்ட சின்னதுரை திருமண வயதைக் கூட எட்டாத 16 வயது மகளை திருமணம் செய்துகொடுக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து 2014 ஜனவரி 2ஆம் தேதி குப்புசாமிக்கு, முத்துலட்சுமியை நிர்ப்பந்தப்படுத்தி, ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.