/

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நாளை ஆடிப்பூரத்தேரோட்டம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்கோவில் 800வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும் இக்கோவிலில் இருக்கும் சிவன் கையடக்கத்தில் அடங்ககூடிய அளவில் மட்டுமே இருப்பார் அதுவும் சுயம்பாக உருவானவர் தரைமட்டத்தைவிட ஆழத்தில் இக்கோவில் இருக்கின்றது இங்குள்ள ராஜகோபுரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிக உயரந்த கோபுரங்களில் இதுவும் ஓன்று.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:00 am

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்கோவில் 800வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும் இக்கோவிலில் இருக்கும் சிவன் கையடக்கத்தில் அடங்ககூடிய அளவில் மட்டுமே இருப்பார் அதுவும் சுயம்பாக உருவானவர் தரைமட்டத்தைவிட ஆழத்தில் இக்கோவில் இருக்கின்றது இங்குள்ள ராஜகோபுரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிக உயரந்த கோபுரங்களில் இதுவும் ஓன்று.

குழந்தைகள் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி குழந்தைபாக்கியம் உண்டாகி அந்த குழந்தையை அம்பாளுக்கு தத்து கொடுப்பது அதிகமாக நடக்கின்றது. இங்கு வைசாசி பெருந்திருவிழா மற்றும் ஆடித்திருவிழா அதுப்போல் பிரதோஷம் சங்கடஹர சதுர்த்தி 1008சங்காபிஷேகம் ஸ்ரீமஹாசிவராத்தரி கந்தசஷ்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாண்டும் ஆடித்திருவிழா கடந்த21ம்தேதி; கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொருநாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அபிஷேகம் பல்லாக்கு சாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை காலை 10.30மணியளவில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.