டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சக்கரம் கழன்று ஓடியதால் கண்டெய்னர் லாரி விபத்து

கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.  ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.  லாரியின் சக்கரம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:52 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் சனிக்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.  ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.  லாரியின் சக்கரம் கழன்றதால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று சாலை தடுப்பின் மீது மோதி நின்றது.  அதனால் முன்பக்க மற்றொரு சக்கரமும், டீசல் டேங்கும் உடைந்து விழுந்தன.  லாரியின் டிரைவர் பயத்தில் அங்கிருந்து ஓடி தலைமறைவானார். 

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய கண்டெய்னர் லாரி நின்றதால் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீஸôர் அங்கு சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.  அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பின்னர் போக்குவரத்து சீரான உடன் வாகனங்கள் செல்லத் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.