நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

6 ஆண்டுகளாக தேடப்பட்ட கொலை குற்றவாளி கைது

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யபாமா. இவரிடம் வரதட்சணை கேட்டு கந்தவேல் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்க மறுத்த சத்யபாமாவை கடந்த 2008ஆம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

பெ. விஜயபாஸ்கர்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியில் வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யபாமா. இவரிடம் வரதட்சணை கேட்டு கந்தவேல் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்க மறுத்த சத்யபாமாவை கடந்த 2008ஆம் ஆண்டு உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கந்தவேல், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவானார். அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எஸ்பி ஆராதிகா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கந்தவேலை பிடிக்க குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் கந்தவேல் கொத்தவாச்சேரியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த கந்தவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.