அதில், ஒண்டிப்புலிநாயக்கனூரைச் சேர்ந்த ராமூர்த்தி(40) என்பவருக்கு சொந்தமான கூடாரத்தில் ஆய்வு செய்ய போலீஸார் வருவதை அறிந்து தப்பியோடினார். அங்கு ஆய்வு செய்ததில் கரிமருந்து 200 கிலோ, 275 கிலோ சல்பர் மூடைகள் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல், குமார்(39) என்பவரின் கூடாரத்தில் 275 கிலோவும், சசிக்குமார்(38) என்வரின் கூடாரத்தில் 550 கிலோவும் மற்றும் பாண்டி(45) என்பவரின் கூடாரத்தில் 175 கிலோவும் என மொத்தம் 1450 கிலோ மூலப்பொருள்களையும், பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.