இதில், ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பங்கேற்று பேசுகையில், தமிழகம் கச்சாப்பட்டு உற்பத்தியில் நான்காவது மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் 20863 விவசாயிகளால் 33861 ஏக்கர் நிலப்பரப்பில் மல்பரி சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து 1000 மெட்ரிக் டன் பட்டுக் கூடு கிடைக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரையில் கிடைக்கிறது. எனவே தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர் பகுதியில் பட்டு உற்பத்தி விவசாயிகள் உள்ளனர். இத்தொழிலை சாத்தூர், சிவகாசி பகுதிகளில் விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.