ஆனால், மேயர் சொன்னது எங்களுக்குக் கேட்கவில்லை என்று கூறி திமுகவினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து திமுகவினர் அனைவரும் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டதால், அவர்களை வெளியேற்றச் சொல்லி மேயர் உத்தரவிட்டார். அவர்களை இந்தக் கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் சொல்ல, அவர்களை வெளியேற்ற காவலர்கள் வந்தனர். அப்போது, திமுகவினர் தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்ல மைக் போடுமாறு கூறினார்கள். ஆனால் அது வேலை செய்யவில்லை. உடனே வேலை செய்யாத மைக் எதுக்கு என்று அவற்றைப் பிடுங்கித் தூர எறிந்தனர். அவ்வாறு மைக்கைப் பிடுங்கியெறிந்த 3 திமுகவினரையும் அடுத்த கூட்டத்துக்கும் சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.