இதேபோல், விருதுநகர்-அழகாபுரி சாலை, விருதுநகர்-சிவகாசி சாலை, சிவகாசி-எரிச்சநத்தம் சாலை, விருதுநகர்-வத்திராயிருப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காட்டு பகுதி மற்றும் சாலையோர கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களில் வழிபாடு நடத்துவதற்காக குவிந்தனர். அங்கு சுவாமி ஆலயத்திற்கு முன்பு பந்தலிட்டு மின் விளக்கு ஆகியவைகளால் சுவாமி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர். அதையடுத்து, காலையில் பொங்கலிட்டு, ஆடு, கோழிகள் பலியிட்டு உறவினர்களுடன் விருந்து சாப்பிட்டு கலைந்து சென்றனர்.