டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சி மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் இன்று ரூ.12 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட் கூட்டத்துக்கு மேயர் ஆர். ஜெயா தலைமையேற்றார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி. ஐயப்பன் 2014 - 15ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:26 am

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி மாநகராட்சியில் இன்று ரூ.12 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்துக்கு மேயர் ஆர். ஜெயா தலைமையேற்றார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி. ஐயப்பன் 2014 - 15ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில், மொத்த வரவு ரூ.304.6 கோடி, செலவு ரூ.316.51 கோடி. பற்றாக்குறை ரூ.12.05 கோடி.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் :

கல்வி நிதியில் இருந்து ரூ.6.70 கோடியில் மாநகராட்சிப் பள்ளிக் கட்டங்கள் மேம்படுத்துதல், வளாகங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்தல்.

திருச்சி மாநகராட்சியில்  புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உட்பட 293 கி.மீ. நீளத்துக்கு ரூ.250 கோடியில் மண் சாலைகளை தார்சாலைகளாகவும், கான்க்ரீட் சாலைகளாகவும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தில்லை நகரில் ரூ.19 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

10 கோடியில் பொன்மலை ஜி. கார்னர் மற்றும் காந்தி சந்தை ஆகிய இடங்களில் நவீன ஆட்டிறைச்சிக் கூடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது

மக்கும் தன்மை உள்ள கழிவுகளில் இருந்து ரூ.90 லட்சத்தில் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தை அடுத்து, வரும் 21ம் தேதி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.