இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து பேசிய போது, 200 பேருக்கு பட்டா நிலம் வழங்க முடியாது. தகுதியானவர்களின் பட்டியலை அளிக்குமாறு கேட்டார். பின்னர் 146 பேர் கொண்ட பட்டியலை முழு விவரங்களுடன் அளித்தோம். மேலும், மறுபடியும் சந்தித்து கேட்டதற்கு உடனே செய்து கொடுக்க முடியாது எனக் கூறி காலதாமதம் செய்து இலவச பட்டா வழங்க மறுத்து வருகின்றனர். இதேபோல், ராஜபாளையம் சமத்துவபுரத்தில் 80 வீடுகளில் ஆள்கள் யாரும் குடியேறாத காரணத்தால் புதர் மண்டிப்போய் காட்சியளிக்கிறது. இது குறித்து விசாரித்து எங்களைப்போல் நிலம், வீடு இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாற்றுத்திறனாளி பாலு தெரிவி்த்துள்ளார்.