விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 692 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் மருந்து உராய்வினால் திடீர் வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் எதிர்பாரதவிதமாக மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் விபத்து ஏற்படாத வகையில் செயல்படுவதற்கு அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே விபத்துக்களை தவிர்க்க முடியும்.