விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்துப்பட்ட இந்த ஆர்ப்பாட்த்திற்கு வட்டாரச் செயலாளர் கோபால்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி மற்றும் வட்டார துணைச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதோடு, நெல்லுக்கு ரூ.15000 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ரூ.7500ம் வறட்சி நிவாரணமாக வழங்கவும் வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்கள் அனைத்தையும் விடுபட்டு போகாமல் பார்வையிட்டு பயிர்கடன்களையும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.