இதனால், விருதுநகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க், கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட 16 வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் இடங்களில் இயங்கி வரும் 126 வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளை திங்கள்கிழமை அணுகினர். ஆனால், ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.