விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடத்திற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது அங்கிகாரம் பெற்ற நிலையங்களில் வயர்மேன் பயிற்சியில் தேர்ச்சி பெற்று என்.டி.சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். அதோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.