/

அரவிந்த் கேஜரிவால் உருவபொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் 17 பேர் மீது வழக்கு

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:17 am

சி. சுரேஷ்குமார்

மார்த்தாண்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என பேட்டியளித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார், எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலர் சனிக்கிழமை மார்த்தாண்டத்தில் அரவிந்த் கேஜரிவாலின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகாயஜோஸ் ஆன்டனி அளித்த புகாரின் பேரில் போலீஸார், ரமேஷ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் 17 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.