மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 8 பிளஸ்2 தேர்வு மையங்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டத்தி்ல் பிளஸ்2 மாணவ, மாணவிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மேலும் கூடுதலாக 8 தேர்வு மையங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:44 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தி்ல் பிளஸ்2 மாணவ, மாணவிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மேலும் கூடுதலாக 8 தேர்வு மையங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு அடுத்தாண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 31-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளான மாணவ, மாணவிகளின் பெயர் சரிபார்ப்பு, பிறந்த தேதி மற்றும் முகவரிகளை சரிபாக்கும் பணிகள் மேற்கொண்டு, சரியான தகவல்களை கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது, இம்மாவட்டத்தில் 192 மேல்நிலைப்பள்ளிகளில், 67 பள்ளிகள் தேர்வு மையங்களாக இருந்து வருகிறது. அதனால் கூடுதலாக மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.  அதை ஆய்வு செய்து நிகழாண்டு முதல் கூடுதலாக 8 தேர்வு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் பிளஸ்2 தேர்வு மையங்களாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 67 மையங்களாக இருந்த நிலையில், கூடுதலாக 8 மையங்களைச் சேர்த்து மொத்தம் 75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.