இந்த விருது பெற விண்ணப்பிப்போர் தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்படும் விருதினை இதற்கு முன்பு பெற்றிருத்தல் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதி உதவி பெற்று வருகின்றவராக இருக்க கூடாது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 28-ம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.