பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

அனைவருக்கும் சட்ட உதவி கிடைக்கவே சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது: நீதிபதி பத்மா தகவல்

விருதுநகர் சட்டப்பணிகள் குழு, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டமும் இணைந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:43 am

எஸ். பாண்டியன்

அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பற்காக நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக நீதிபதி பத்மா தெரிவித்தார்.

விருதுநகர் சட்டப்பணிகள் குழு, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற முன்னேற்ற திட்டமும் இணைந்து நடத்திய இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உபதலைவர் என்.தனபால் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் அழகுசுந்தரம், மூத்த வழக்குரைஞர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.இ.பத்மா பங்கேற்று பேசுகையில், அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்காக தாலுகா தலைமையிடத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவானம்சம் பெறவும், வரதட்சணை கொடுமை, சொத்து பிரச்னை ஆகியவைகளிலிருந்து இம்மையம் மூலம் உரிய நீதி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஏழைகளுக்கு இலவசமாக வாதிடுவதற்கு வழக்குரைஞர்களும் ஏற்பாடு செய்வதோடு, அக்கட்டணத்தை நீதிமன்றமே செலுத்தி விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த முகாமில் நீதித்துறை நடுவர் எ.பாலகிருஷ்ணன் பேசும் பொழுது, குற்றங்கள் செய்து விட்டு சட்டங்கள் தெரியாது என யாரும் சொல்ல முடியாது. தற்போதைய காலகட்டங்களில் கணிப்பொறி, கைப்பேசி ஆகியவைகளின் மூலம் குற்றங்கள் என்பது அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

இதில், விருதுநகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, வழக்குரைஞர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆர்.ரமேஷ்குமார், சட்டப்பணிகள் குழு அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.