பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று புதன்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று புதன்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை அரசு உத்தரவுப்படி தலைநகரில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நீதிமன்றப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு விருதுநகர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்புராம் தலைமை வகித்தார். 

இப்பேரணி சாத்தூர் சாலையில் இருந்து நகராட்சி சாலை, பாத்திமா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.