பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே வாகன விபத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் காயம்

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அன்னராஜ்(42). இதே காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறவர் ஜெயப்பிரகாஷ்(36). இவர்கள் திருட்டு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வாகன விபத்தில் காவல் ஆய்வாளர், போலீஸார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அன்னராஜ்(42). இதே காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறவர் ஜெயப்பிரகாஷ்(36). இவர்கள் திருட்டு வழக்கில் கைதான 5 கொள்ளையர்களை திங்கள்கிழமை இரவு நீதிபதி வீட்டில் ஆஜார்படுத்துவதற்காக காவல் துறை வாகனத்தில் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் இருசக்கர வாகனத்திலும்  சென்றனர்.

அப்போது, நான்குவழிச்சாலையில் வடமலைக்குறிச்சி அணுகுசாலையில் செல்லும் போது எதிரே சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சைக்கிளில் குறுக்கே வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல் ஆய்வாளர், போலீஸ்காரர் மற்றும் சைக்களில் சென்றவர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.