பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகன விபத்தில் பெண் சாவு

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் மேம்பாலம் அருகே வாகன விபத்தில் தலை நசுங்கிய நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தாராம். இதை அப்பகுதியில் உள்ள

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் வாகன விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் மேம்பாலம் அருகே வாகன விபத்தில் தலை நசுங்கிய நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தாராம். இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்க்கையில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் உயிரிழந்து கிடந்ததார்.

இது தொடர்பாக அப்பகுதியில் இருந்தவர்களிடம் யார் என்பது குறித்து விசாரித்ததில் அடையாளம் தெரியவில்லை என்றனர். உடனே போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் மற்றும் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.