ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அரசு மகளிர் காப்பகத்தில் 6 பெண்கள் தப்பி ஓட்டம்

மன்னார்புரம் அருகேயுள்ள காஜாமலை,  ரேஸ்கோர்ஸ் (குதிரை பந்தய சாலை) சாலையில் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்கில்  தொடர்புடைய 17 பெண்கள்

Updated On :16 டிசம்பர் 2014, 3:24 pm

திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள அரசு மகளிர் காப்பகத்திலிருந்து 6 பெண்கள் தப்பியோடியிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

மன்னார்புரம் அருகேயுள்ள காஜாமலை,  ரேஸ்கோர்ஸ் (குதிரை பந்தய சாலை) சாலையில் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்கில்  தொடர்புடைய 17 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.செவ்வாய்க்கிழமை அதிகாலை காப்பக ஊழியர்கள் உள்ளே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அடைக்கப்பட்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஸியா (25), பெங்களுரூ பகுதியைச் சேர்ந்த ஷானா (21), அபிமண்டல் (22), ஷானா ஷேக் (23), சல்மா (21), நிஷா சலோமிஸியா (25) ஆகிய 6 பேர் தப்பியோடிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காப்பகக் கண்காணிப்பாளர்  தேவிகா, கே.கே. நகர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸôர்  வழக்குப் பதிந்து தப்பியோடிய பெண்களை தேடி வந்தனர்.இந்நிலையில் விமான நிலையம், வயர்லஸ்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தில் அவர்கள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய ஷானா, ரஸியா என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அறையினுள்ள ஜன்னல் கம்பியியை நெம்பி, பின்னர் தடுப்புச் சுவர் மீது  ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறங்கி தப்பியோடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிடித்த அந்த பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமறைவான 4 பெண்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.