விளாத்திகுளம் அருகே குமாரசக்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் போலீஸில் அளித்த புகாரில், வேம்பாறு கிராமத்தில் 7ம் வகுப்பு பயிலும் தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் லட்சுமணன்(62) என்பவர், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீஸார், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான லட்சுமணனை கைது செய்தனர்.
வீட்டில் இருந்து பள்ளிக்கு 10 கி.மீ. தொலைவு இருப்பதால், மாணவிகள் பள்ளிக்கு பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் சென்று வருவார்களாம். அப்போது, லட்சுமணன் தின்பண்டங்கள் வாங்கித் தருவாராம். அதுபோல் இந்தச் சிறுமிக்கும் தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு நாள், தன் வீட்டுக்கு வரச் சொல்லி இந்தச் சிறுமியிடம், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இது குறித்து அந்தச் சிறுமி தன் தந்தையிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து முதியவர் லட்சுமணன் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானது எப்படி?

பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!” நயினார் நாகேந்திரன் | BJP
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


