காங்கிரஸ்-பா.ஜ.க ஆகிய கட்சிகளின் கொள்கை ஒரே பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. அதன் மூலம் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அதனால் வருகிற மக்களவை தேர்தலில் மாற்று அரசு தேவையாக இருக்கிறது. அதனால், மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற கட்சிகளுடனும், அதோடு இவ்விரு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையிலேயே கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இரண்டு தரப்பு மீனவர்கள் மற்றும் அலுவலர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.