விருதுநகர் அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி தனலட்சுமி(36). இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் வழக்கம் போல் வீட்டைப் பூட்டி விட்டு சாவியை, விடுமுறை என்பதால் பிள்ளைகளிடம் கொடுத்துச் சென்றார்களாம். பின்னர் மதிய உணவுக்காக தனலட்சுமி மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டுக் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவை உடைத்து உள்ளேயிருந்த ரொக்கம் ரூ.26500 மற்றும் கம்மல், வெள்ளிக்கொலுசு ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது.தெரியவந்தது. உடனே இது தொடர்பாக தனலட்சுமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.