ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் நகர், அருந்ததியர் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 4 மாதங்களாகவே குடிதண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிப்பதற்கான தண்ணீர் இல்லாத நிலையில் 2 கி.மீ தூரம் நடந்து பம்ப்செட் தோட்டத்திலும், அருகில் உள்ள தெங்குவெங்காநல்லூர் கிராமத்திற்கும் சென்று எடுத்து வரவேண்டியிருக்கிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் காலை நேரங்களில் தண்ணீர் எடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் பஞ்சாலை மற்றும் விவசாய கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையேற்படுகிறது.