இதுபோன்று சம்பவம் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னியினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது, இதுபோன்ற பிரச்னை கிராம மக்களிடையே இருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, விருதுநகர் வட்டாட்சியர் மங்களநாதன், வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் மூக்கன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஞானகுரு, மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் ஊராட்சி தலைவர் கீதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் சமமாக இருக்க வேண்டும். இதற்காகவே பொது குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், யார் வேண்டுமானலும் குளிக்கலாம் எனக் கூறி பொதுமக்களை சமதானம் செய்து வைத்தனர். அதன் பி்ன் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.