விருதுநகரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். மக்களவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி.வி.கார்த்திக் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக், விருதுநகர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மோகன் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினார்கள். இம்மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரையிலேயே கூலி வழங்கப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருவதால், முழு அளவு கூலித்தொகையான ரூ.148 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மக்களவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பால்பாண்டி, சதீஸ் மற்றும் மைக்கேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

