இம்மாவட்டத்தில் ராபி பருவத்தில் நெல்-31 ஆயிரம் ஹெக்டேர், சிறுதானிய பயிர்கள் 43 ஆயிரம் ஹெக்டேர், பயறு வகைகள் 18330 ஹெக்டேர், எண்ணெய் வித்து பயிர்களில் 7820 ஹெக்டேர், பருத்தி 10500 ஹெக்டேர், கரும்பு 4 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.எனவே இப்பயிர்களுக்கு தேவைப்படும் உரங்களான 10368 மெட்ரிக் டன் யூரியா, 14599 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 9430 மெட்ரிக் டன் பொட்டாஷ், 12403 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவைப்படுகிறது. இப்பயிர்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.