நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அக்டோபர் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் பி.கண்ணபிரான் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இடத்தில் தேவாராஜ் என்பவர் லாட்ஜ் கட்டுகிறார். அதற்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சணா பட்நாயக் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையைடுத்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சணா பட்நாயக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தொட்டபெட்டா பஞ்சாயத்து பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு தவறுதலாக அனுமதி வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டடம் கட்டுவதை நிறுத்த நோட்டீஸ் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பின்பற்றவில்லை எனக் கூறி பி.கண்ணபிரான் கடந்த 2012-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட லாட்ஜ் உரிமையாளர் அந்தக் கட்டடத்தை முழுமையாகக் கட்டிமுடித்துவிட்டார் எனவும், அதன் அருகில் மேலும் ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது எனவும் இதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தற்போது கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள அர்ச்சணா பட்நாயக் அக்டோபர் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

