பாளையங்களில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்தும், அதில் உள்ள சேவைக்காரர்கள், சேவர்கள், குடியானவர்கள் பொருள்களையும், கையி்ல் உள்ள ஆயுதங்களையும், பறிமுதல் செய்து கொள்ள நேர்ந்தது. இந்த விளம்பரம் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் இனிமேல் யாதொரு பாளையக்காரனுக்கும், வரி, வட்டி, கோட்டை, கொத்தலம் முடையங்கள் போட்டாலும், பீரங்கி, ரேக்குகள், கொடிமரங்கள் வைத்து இருந்தாலும், கத்தி, ஈட்டி முனை வைத்திருந்தாலும் அவர்கள் ஆங்கிலேயர்களின் ஆதரவுகளை இழந்தும், அவர்களின் பாளையப்பட்டுகளை பறித்துக் கொண்டும், ஆங்கிலேயருக்கு எதிரி என்று தண்டிக்கப்படுவர்.பாளையப்பட்டுக்களிலுள்ள சேவைக்காரர், சேவுகர்கள், காவல் காரர்கள், குடியானவர்கள் யாவரானாலும் கல்வெடி, திரிவெடி, ஈட்டி, வல்லையம், பிடிகத்தி, பிக்காஸ்கனைகள் போன்றவற்றைகளை பதுக்கினாலும், வைத்திருந்தாலும் அந்த பாளையக்காரர்கள் தண்டிக்கப்படுவர். இவர்கள் யார் தவறு செய்தாலும் பாளையக்காரர்களே பொறுப்பு என்று உத்தவாதம் செய்ய வேண்டும். இதை மீறி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கண்டால் பிடிபட்டவர்களின் உயிர்சேதம் செய்யப்படும். அந்த பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களால் தட்டப்படும். இந்த விளம்பரம் செய்ய வேண்டி மெசர்பானர்மேன் துரையின் உத்தரவின் படி அனைவரும் சட்டதிட்டங்களை இனிமேல் பட்டு ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது குறித்து செப்பு பட்டயத்தில் எழுதி பாளையம்பட்டு தலை கிராமங்களில், பிரபலமாக இருக்கப்பட்ட இடங்களில் அடித்து வைத்து உத்தரவு ஆச்சுது, என செப்பு பட்டயத்தில் இருக்கிறது.