சேலம் - கரூர் அகல ரயில்பாதையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, நாமக்கல் ரயில்நிலையத்துக்கு வந்த அவர், அங்கு அலுவலக அறை, பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்தகம் அமைக்கப்படும் இடம் போன்றவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் - கரூர் அகல ரயில்பாதைக்கு இடைப்பட்ட பகுதிகளில் சேவைச்சாலைகள் அமைப்பதற்கு தேவையான நிலங்கள் தற்போதுதான் மாநில வருவாய்த்துறையிடம் இருந்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு இணைப்புச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.