விருதுநகர் அருகே கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்களைக் கழக வளாகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் மண்டல அளவிலான பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதில், 10-வது, 12-வது வகுப்பு அரசு தேர்வில் சராசரிக்கும் மதிப்பெண் குறைவாக பெற்ற உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. எனவே மண்டல அளவிலான மேம்பாட்டு பயிற்சி முகாமில் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து தலைமையாசிரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.