இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுலைமான், வட்டடாட்சியர் மங்களநாதன், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் சிறப்பு வட்டாட்சியர் ராமசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்து மருந்துக் குடோன் அறைக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் போராடி அனைத்தனர். எனவே இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தினர் உரிமையாளர் கந்தசாமி, மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.