ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசியதாவது: இம்மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு, கதர் ரகங்கள், போர்வைகள், பாலியஸ்டர், கம்பளி, பட்டு சேலைகள், பாவடைகள் மற்றும் மெத்தைகள், விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.